திருவண்ணாமலை அருகே துணி காயவைத்தபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
தண்டராம்பட்டை அடுத்த வரகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித்தொழிலாளி குப்பன் (35). இவரது மனைவி சித்ரா (34). தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். இந்த நிலையில், சித்ரா சனிக்கிழமை காலை வீட்டுக்கு அருகே உள்ள இரும்புக் கம்பியில் துணியை காயவைத்தாராம். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவலறிந்த தண்டராம்பட்டு போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.