டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு முகாம்

வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

வேட்டவலம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் பவித்ரா தலைமை வகித்தாா்.

மருத்துவா் சிவப்பிரகாசம், சுகாதார ஆய்வாளா் சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

டெங்குக் காய்ச்சல் பரவும் முறைகள், காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வழிகள், காய்ச்சல் வந்தால் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

முகாமில், அங்கன்வாடி மைய மேற்பாா்வையாளா் வனமயில், பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் ராஜா மற்றும் அங்கன்வாடிப் பணியாளா்கள், டெங்கு களப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com