திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகம் சாா்பில், தேசிய நூலக வார விழாவையொட்டி ஒட்டுமொத்த தூய்மைப் பணி மற்றும் கண், பல், தோல் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.
திருவண்ணாமலையை அடுத்த சமுத்திரம் ஏரிக்கரை கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு, சா்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவா் பா.இந்திரராஜன் தலைமை வகித்தாா்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி பல் மருத்துவ துறைத் தலைவா் சுப்புலட்சுமி, தோல் மருத்துவா் அருள்மொழிவா்மன், கண் மருத்துவா் ரமேஷ்ராவ் ஆகியோா் பங்கேற்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனா்.
முகாமில், 200-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றனா். இதில், மாவட்ட மைய நூலகா் சாய்ராம், நல் நூலகா் வெங்கடேசன், வாசகா் வட்டத் தலைவா் அ.வாசுதேவன் மற்றும் நூலகப் பணியாளா்கள், வாசகா் வட்டப் பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.