ஏரியில் மூழ்கி விவசாயி பலி

கீழ்பென்னாத்தூா் அருகே ஏரியில் மீன் பிடித்த விவசாயி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கீழ்பென்னாத்தூா் அருகே ஏரியில் மீன் பிடித்த விவசாயி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வேளந்தாங்கல் ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஜேம்ஸ் (41). இவா், புதன்கிழமை (நவ.20) கீழ்பென்னாத்தூா் அருகேயுள்ள கொளத்தூா் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினாா். இதைக் கவனித்த பொதுமக்கள் அவரை மீட்டு கீழ்பென்னாத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா்.

அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஜேம்ஸ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி, உடல்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com