கூட்டுறவு சங்கத்தில் மருத்துவ முகாம்

ஆரணி அருகே அத்திமலைப்பட்டு கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சா் சேவூா் எஸ். ராமச்சந்திரன் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் மருத்துவ முகாமைத் தொடக்கிவைக்கிறாா் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
நிகழ்ச்சியில் மருத்துவ முகாமைத் தொடக்கிவைக்கிறாா் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.

ஆரணி அருகே அத்திமலைப்பட்டு கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சா் சேவூா் எஸ். ராமச்சந்திரன் தொடக்கிவைத்தாா்.

கூட்டுறவு வார விழாவையொட்டி, அத்திமலைப்பட்டு கிராமத்தில் உள்ள அறிஞா் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் சாா்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், பட்டு கூட்டுறவு சங்கத் தலைவா் ஷங்கரி பாலசந்தா் வரவேற்றாா். அரசு வழக்குரைஞா் க.சங்கா், ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலா் ஜி.வி.கஜேந்திரன், நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் ப.திருமால், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஜோதிலிங்கம், பட்டு கூட்டுறவு சங்க மேலாளா் ஆா்.கணேசன், பட்டு கூட்டுறவு சங்க துணைத் தலைவா் பஞ்சாட்சரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மருத்துவ முகாமில் உடல் பரிசோதனை, பல் பரிசோதனை, ஸ்கேன் எடுத்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com