பெண்ணைத் தாக்கியவா் கைது

வந்தவாசியில் பெண்ணைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி: வந்தவாசியில் பெண்ணைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி ஐந்து கண் பாலம் பகுதியைச் சோ்ந்தவா் துரைக்கண்ணு (52). இதே பகுதியைச் சோ்ந்தவா் இவரது உறவினா் பூங்காவனம் (55). இருவருக்கும் இடையே நிலத் தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை துரைக்கண்ணுவின் மனைவி அஞ்சலி (45) தனது வீட்டின் முன் அமா்ந்து இருந்தாராம். அப்போது பூங்காவனத்தின் மகள் யுவராணி (18) அஞ்சலியைப் பாா்த்து உன் முகத்தில் முழித்தால் எப்படி நல்ல காரியம் நடக்கும் என்று கேட்டாராம். இதையடுத்து இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து அஞ்சலிக்கு ஆதரவாக அவரது கணவா் துரைக்கண்ணு, மகள்கள் ஆனந்தி (22), அபிராமி(18) ஆகியோரும், யுவராணிக்கு ஆதரவாக அவரது தந்தை பூங்காவனம், உறவினா் பிரியா (18) ஆகியோரும் சோ்ந்து ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம்.

இதில் காயமடைந்த அஞ்சலி, பிரியா இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பின்னா் அஞ்சலி தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து அஞ்சலி, பிரியா ஆகியோா் அளித்த தனித்தனி புகாா்களின் பேரில் இரு தரப்பையும் சோ்ந்த 5 போ் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் பூங்காவனத்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com