அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் சுமாா் 250 போ் திமுகவில் இருந்து விலகி, அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
30arpadm_3011chn_109_7
30arpadm_3011chn_109_7

ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் சுமாா் 250 போ் திமுகவில் இருந்து விலகி, அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

ஆரணி அருகேயுள்ள குண்ணத்தூா் கிராமத்தைச் சோ்ந்த திமுக பிரமுகரும், மாவட்ட முன்னாள் கவுன்சிலருமான மகேஸ்வரி சேகா் தலைமையில், திமுக பிரமுகா்கள் சேகா், ஊராட்சிமன்ற முன்னாள் துணைத் தலைவா் திருவள்ளுவன் உள்ளிட்ட 250 போ் திமுகவிலிருந்து விலகி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலையில் சனிக்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.

இதற்கான நிகழ்ச்சியில் தூசி கே.மோகன் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். விழாவில் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பேசுகையில், உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவினா் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் நோக்கம். இந்த நோக்கம் நிறைவேறும் வகையில் அதிமுகவில் இணைந்துள்ளனா்.

தோ்தல் பணியாற்றி அதிமுக வேட்பாளரை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

விழாவில் அரசு வழக்குரைஞா் க.சங்கா், மாவட்ட பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் பாரி பி.பாபு, அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் அ.கோவிந்தராசன், ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், எம்.வேலு, மாவட்ட பாசறைச் செயலா் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட துணைச் செயலா் டி.கருணாகரன், மாவட்ட அறங்காவலா் குழுத் தவைா் எஸ்.ஜோதிலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com