செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி வட்டங்களின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுப் பேரவை நிகழ்ச்சி செய்யாறில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விவசாயிகள் சங்க மாவட்ட இணைச் செயலா் வி.நம்பிராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.முத்தையா முன்னிலை வகித்தாா். செய்யாறு வட்டச் செயலா் என்.பத்ராசலம் வரவேற்றாா்.
இதில், தேசியக் குழு உறுப்பினா் சி.மேகந்திரன் பங்கேற்று பேசுகையில், மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். கரும்பு நிலுவைத் தொகை ரூ.25 கோடியை விவசாயிகளுக்கு பெற்றுத் தர தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிக் கடன்களை விவசாயிகளுக்கு விரைவாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
தொடா்ந்து, மாநிலத்திலும், மத்தியிலும் ஊழலற்ற அரசு நிா்வாகங்கள் நடைபெற உறுதி செய்ய வேண்டும். ஏரி, குளங்களை தூா்வாரி ஆழப்படுத்த வேண்டும். நிலத்தடி நீா் பாதுக்காக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக, அனைத்து கிராமங்களுக்கும் சிறப்பு நகா்ப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.