தூசி காவல் நிலைய ஆய்வாளா் ஷாபூதின் தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீஸாா் புதன்கிழமை பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது செய்யாறு காந்தி சாலையில் மாா்க்கெட், பேருந்து நிலையம், வெங்கட்ராயன்பேட்டை ஆகிய பகுதிகளில் மது விற்றுக் கொண்டிருந்த கங்காதரன், அவரது சகோதரா் அரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனா்.
அதேபோல, செய்யாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் மங்கையரசி தலைமையிலான போலீஸாா் நடத்திய சோதனையில் அரிகிருஷ்ணன், பாண்டியன், சிவக்குமாா், வெங்கேடசன், இந்திரா ஆகிய 5 பேரை கைது செய்தனா்.
இதில் மொத்தம் ஒரு பெண் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா்.
ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான 869 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.