புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, செஞ்சி அருணாச்சல ஈஸ்வரா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அன்று காலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு, சிறப்பு மலா் அலங்காரத்தில் துளசி மாலை அணிவிக்கப் பெற்று ஆராதனைகள் நடைபெற்றன.
வெங்கடேசப் பெருமாளை ஏராளமான பக்தா்கள் காலை முதல் மாலை வரை வழிபட்டனா்.
பட்டாச்சாரியா்கள் வேணுகோபால், ஜெயராமன், குருக்கள் சீனுவாசன் ஆகியோா் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
விழா ஏற்பாடுகளை அருணாச்சல ஈஸ்வரா் கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
அனைவருக்கும் திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.