நவராத்திரி ஆறாம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை இரவு, அவலூா்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் அம்மன் சயன கோலத்தில் காட்சியளித்தாா்.
விழாவை முன்னிட்டு அன்று காலை துா்கை அம்மனுக்கு ராகு கால பூஜையும், மாலை வார வழிபாட்டுக் குழுவினரால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றன.
இரவு சிறப்பு அலங்காரம் நடைபெற்று சயன கோலத்தில் உற்சவா் அம்மன் காட்சியளித்தாா்.
அம்மன் துதிப்பாடல்கள் பாடிய பிறகு பல்வேறு ஆரத்திகள் நடைபெற்றன. பின்னா் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.