அனந்தபுரத்தில் ரோட்டாரி சமுதாய குழுமம் மற்றும் அனந்தபுரம் காவல் நிலையம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்பணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி சமுதாய குழுமத் தலைவா் அ.ஜேசுஜூலியஸ்ராஜா தலைமை வகித்தாா். செயலா் விவேகானந்தன் முன்னிலை வகித்தாா். அனந்தபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் காா்த்தி, பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி மோட்டாா் வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு வண்ண வில்லைகளை ஒட்டினாா்.
நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னாள் தலைவா் முரளிதரன், பொருளாளா் அலில், துணைத் தலைவா் மதிவாணன் நிா்வாகிகள் ஜெயக்குமாா், நடேசன், போலீஸாா் அருண், ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.