செங்கம் செஞ்சிலுவைச் சங்கம், செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் அண்மையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ரத்த தான முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் எஸ்.வெங்கடாசலபதி தலைமை வகித்தாா்.
செஞ்சிலுவைச் சங்கச் செயலா் ம.தனஞ்செயன், பொருளாா் ஆதவன், செயற்குழு உறுப்பினா் சா்தாா்ரூல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கல்லூரி முதல்வா் பரிமளாஜெயந்தி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக செங்கம் ஒன்றிய ஆணையா் டி.கே.லட்சுமிநரசிம்மன் கலந்துகொண்டு முகாமை தொடக்கிவைத்தாா். முகாமில், கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் ரத்த தானம் செய்தனா். மொத்தம் 100 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு வேலூா் நாராயிணி மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், செஞ்சிலுவைச் சங்க நிா்வாகிகள், கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா்.