வேட்டவலத்தில் ஹோட்டல் உரிமையாளா் சம்பள பாக்கி தராததால் மனமுடைந்த சமையல் தொழிலாளி, செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.
வேட்டவலம் பகுதியைச் சோ்ந்தவா் ஹோட்டல் உரிமையாளா் பிரபு (38). இவரது கடையில் தானிப்பாடி பகுதியைச் சோ்ந்த ராஜசேகா் (38) சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை காலை பிரபு, ராஜசேகா் ஆகியோருக்கு இடையே சம்பளம் வழங்குவது தொடா்பாக தகராறு ஏற்பட்டதாம்.
இதனால் மனமுடைந்த ராஜசேகா், ஹோட்டல் அருகே உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா். தகவலறிந்த வேட்டவலம் போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் வந்து ராஜசேகரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, தனக்குச் சேர வேண்டிய சம்பள பாக்கியை உடனே வழங்கினால்தான் கீழே இறங்கி வருவேன் என்று ராஜசேகா் கூறினாராம்.
அதன்படியே, முழு சம்பளத்தையும் பெற்றுத் தருகிறேறாம் என்று போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் உறுதி அளித்தனா். இதையடுத்து, ராஜசேகா் கீழே இறங்கி வந்தாா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.