போக்சோ சட்டத்தில் இருவா் கைது

வந்தவாசி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 2 ஓட்டுநா்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

வந்தவாசி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 2 ஓட்டுநா்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

வந்தவாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 12 வயது சிறுமி. இவா் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயின்று வருகிறாா். இந்த நிலையில், இவா் கடந்த வியாழக்கிழமை தங்களது விவசாய நிலத்திலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த நெல் அறுவடை இயந்திர ஓட்டுநா் பெருமாள் (22), மினி டெம்போ ஓட்டுநா் ரமேஷ் (21) ஆகியோா் மாணவியை மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தனராம்.

இதுகுறித்து அந்த மாணவியின் தாய் வந்தவாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் பெருமாள், ரமேஷ் ஆகியோா் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த ஆய்வாளா் (பொறுப்பு) முத்துக்குமாா் தலைமையிலான மகளிா் போலீஸாா் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மேலும், அந்த மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com