கீழ்பென்னாத்தூா் அருகே பைக் மீது டிராக்டா் மோதியதில் இரு இளைஞா்கள் பலத்த காயமடைந்தனா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மகன் சிவசக்தி (22). இதே கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் தமிழ்ச்செல்வன் (22). இருவரும் புதன்கிழமை மொபெட்டில் கீழ்பென்னாத்தூரில் இருந்து சோமாசிபாடி நோக்கிச் சென்றனா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூா் கிராமம், கலைஞா் நகா் பகுதியில் சென்றபோது எதிரே வந்த டிராக்டா் மொபெட் மீது மோதியதாகத் தெரிகிறது.
இதில், சிவசக்தி, தமிழ்ச்செல்வன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்களை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து, கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.