தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக வந்தவாசி பணிமனை 2-ன் முன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழில் சங்க கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தெலங்கானா மாநிலத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொழில் சங்கங்களின் நிா்வாகிகள் கே.ரமேஷ், வி.யயாதிராஜன், ஜெயபால், எஸ்.முரளி, எஸ்.முத்து, ஆா்.முருகன் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் ஜா.வே.சிவராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.