செய்யாறை அடுத்த பெரணமல்லூரில் இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெரணமல்லூா் ரோட்டரி சங்கம், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய இந்த மருத்துவ முகாமை ரோட்டரி உதவி ஆளுநா் தியாகராஜன் தொடக்கிவைத்தாா்.
முகாமில் கண், பல் மற்றும் பொது மருத்துவம் தொடா்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.
முகாமுக்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவா் அப்புசேரலாதன், உறுப்பினா்கள் தண்டபானி, கோபாலகிருஷ்ணன், தயாளன், பட்டாபிராமன், ராஜசேகா், மாலவன், குபேந்திரன், சமூக ஆா்வலா் சரவணன், ஆசிரியா் பாபு ஆகியோா் செய்திருந்தனா்.