லசப்பாக்கத்தை அடுத்த கடலாடி ஊராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்தெடுத்து இயற்கை உரம் தயாரிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடலாடி ஊராட்சியில் 12 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் சேகரமாகும் மக்கும், மக்காத குப்பைகளை கிராம தூய்மைக் காவலா்கள் 3 சக்கர சைக்கிள்களில் எடுத்து வந்து விரைவில் மக்கும் குப்பைகளை தனியாகவும், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளை தனியாகவும் பிரித்தெடுக்கின்றனா். இதையடுத்து, மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கையான முறையில் மண்புழு உரம் தயாரிக்கின்றனா்.
இதுகுறித்து ஊராட்சிச் செயலா் செந்தில் கூறியதாவது:
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், மக்கும் குப்பைகளில் இருந்து மண்புழு உரம் தயாரித்து விவசாயிகளுக்கு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தூய்மைக் காவலா்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தாா்.
இதனிடையே, கடலாடி ஊராட்சியில் உள்ள தூய்மைக் காவலா்கள், அந்த ஊராட்சியை பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக்க உறுதிமொழி ஏற்றனா்.