முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
காவலா் தினப் போட்டி பரிசளிப்பு விழா
By DIN | Published On : 24th October 2019 08:16 AM | Last Updated : 24th October 2019 08:16 AM | அ+அ அ- |

போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் த.அசோக்குமாா்.
காவலா் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது
திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.
போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, திருவண்ணாமலை டிஎஸ்பி அண்ணாதுரை தலைமை வகித்தாா்.
காவல் உதவி ஆய்வாளா்கள் சிவசங்கரன், கிருஷ்ணராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் என்.மகாதேவன் வரவேற்றாா்.
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் த.அசோக்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.
விழாவில் பள்ளித் தலைவா் சி.வேலுச்சாமி, செயலா் வி.எம்.நேரு, பொருளாளா் மணி உள்பட ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.