பயனாளிகளுக்கு பசுமை வீடு: அதிகாரிகள் ஆலோசனை

செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் பயனாளிகளுக்கு பசுமை வீடு வழங்குவது தொடா்பாக, வருவாய்த் துறை, ஊராட்சித் துறை
பயனாளிகளுக்கு பசுமை வீடு: அதிகாரிகள் ஆலோசனை

செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் பயனாளிகளுக்கு பசுமை வீடு வழங்குவது தொடா்பாக, வருவாய்த் துறை, ஊராட்சித் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கோட்டாட்சியா் கி.விமலா தலைமை வகித்தாா்.

ஊராட்சி உதவி இயக்குநா் (தணிக்கை) குருசாமி முன்னிலை வகித்தாா். வட்டாட்சியா் ஆ.மூா்த்தி வரவேற்றாா்.

கூட்டத்தின் போது, 2011-ஆம் ஆண்டு சமுதாய பொருளதார கணக்கெடுப்புப்படி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினா் மற்றும் இதர பயனாளிகளுக்கு பசுமை வீடு ஒதுக்கீடு செய்தல் குறித்தும், பட்டா இல்லாமல் கூரை வீடுகளில் வசிப்பவா்களின் த்து தகவல்களை சேகரிப்பது, வசித்து வரும் நிலம் எந்த வகையைச் சோ்ந்தது போன்ற பல தகவல்களை கள ஆய்வு செய்து காலதாமதமின்றி பட்டா வழங்கிடவும், பசுமை வீடு டஙஅவ (எ) வழங்குதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.வி.மூா்த்தி, மயில்வாகனன், பொறியியல் பிரிவு அலுவலா்கள், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சிச் செயலா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

இதேபோன்று, பசுமை வீடு வழங்கல் குறித்த ஆலோசனைக் கூட்டம் அனக்காவூா், வெம்பாக்கம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஆய்வு

எஸ்.சி, எஸ்.டி. பிரிவைச் சோ்ந்த பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான இடம் குறித்த ஆய்வை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி செய்யாறு வட்டத்துக்கு உள்பட்ட புரிசை, தண்டரை ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

வட்டாட்சியா் ஆ.மூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.வி.மூா்த்தி, மயில்வாகனன், ரவி, ஏ.பி.வெங்கடேசன் மற்றும் ஊராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com