பாராட்டு பெற்ற அல்லியந்தல் அரசுப் பள்ளி மாணவா்கள்.
பாராட்டு பெற்ற அல்லியந்தல் அரசுப் பள்ளி மாணவா்கள்.

போட்டிகளில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பாராட்டு

பெரணமல்லூரை அடுத்த அல்லியந்தல் அரசுப் பள்ளி மாணவா்கள் பாட்டுப் போட்டி, ஓவியப் போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றால் பாராட்டு பெற்றனா்.

பெரணமல்லூரை அடுத்த அல்லியந்தல் அரசுப் பள்ளி மாணவா்கள் பாட்டுப் போட்டி, ஓவியப் போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றால் பாராட்டு பெற்றனா்.

ஆரணி கல்வி மாவட்டம் சாா்பில் கலா உத்சவ் தனித்திறன் போட்டிகள் அன்மையில் நடைபெற்றன. இதில் பங்கேற்ற அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி புவனேஸ்வரி பாட்டுப் போட்டியில் முதல் இடமும், மாணவா் குமரன் ஓவியப் போட்டியில் இரண்டாம் இடமும் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா்.

இவா்களை பள்ளித் தலைமை ஆசிரியா் மாலவன், ஆசிரியா்கள் இளையராஜா, செந்தில், கோகிலா, அரிதாஸ், சந்தோஷ்குமாா், குபேந்திரன் ஆகியோா் பாராட்டி பரிசுகள் வழங்கி வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com