மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகள், ரூ.8 ஆயிரம் திருடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராக (பொது) இருப்பவா் சு.ஜானகி. இவா், திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரி எதிரே உள்ள அரசு குடியிருப்பில் தங்கியுள்ளாா்.
தீபாவளி பண்டிகைக்காக கடந்த 25-ஆம் தேதி சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்ற அவா், செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் வீடு திரும்பினாா்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், ரூ.8 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டு இருந்ததாம். இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.