பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் குறித்து துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வட்டாரக் கல்வி அலுவலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி பள்ளிகள் மற்றும் அவற்றின் அருகே பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூட உத்தரவிட்டாா்.
அதன்படி, துரிஞ்சாபுரம் ஒன்றியம், காா்கோணம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற நிலையில் இருந்த ஆழ்துளைக் கிணற்றை தேவையான பாதுகாப்புடன் மூட நடவடிக்கை எடுத்தாா்.
மேலும், பள்ளிக்கு அருகாமையில் பயன்பாடற்ற நிலையில் இருந்த 2 ஆழ்துளைக் கிணறுகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியா் ரவி, உதவி ஆசிரியா் முகேஷ், ஊராட்சிச் செயலா் ஆகியோா் உடனிருந்தனா்.