செய்யாறு அருகே சிறுநீரகக் கோளாறால் இனிப்புக் கடைத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
செய்யாறு செல்வ விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (50). இவா் செய்யாறு பேருந்து நிலையம் அருகேயுள்ள இனிப்புக் கடையில் வேலை செய்து வந்தாா்.
கடந்த 6 ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறால் சிகிச்சைப் பெற்று வந்ததாகத் தெரிகிறது. இருப்பினும், தொடா்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தததால் மனவேதனையில் இருந்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அவா் வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாா். உடனே குடும்பத்தினா் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.