செங்கம் அருகே தரைப்பாலத்தை சரிசெய்யகோரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு

செங்கம் அருகே தரைப்பாலத்தை சரிசெய்யகோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுஅனுப்பியுள்ளனா்.
செங்கம் வழியாக ஓடும் செய்யாற்றின் குறுக்கே தளவாநாய்க்கன்பேட்டை பகுதியில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது
செங்கம் வழியாக ஓடும் செய்யாற்றின் குறுக்கே தளவாநாய்க்கன்பேட்டை பகுதியில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது

செங்கம் அருகே தரைப்பாலத்தை சரிசெய்யகோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுஅனுப்பியுள்ளனா்.

செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றின் குறுக்கே செங்கம் துா்க்கையம்மன்கோவில் தெருவில் இருந்து தளவாநாய்க்கன்பேட்டை மற்றும் புதுப்பட்டு, ஆலபுத்தூா், காமராஜ் நகா் பரமனந்தல் ஆகிய சுற்றுப்புற கிராம மக்கள் செல்வதற்கு தரைப்பாலம் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த தரைப்பாலம் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.

தரைப்பாலத்தை கடக்கும்போது பொதுமக்கள் அச்சத்துடன் கடந்துசெல்லும் நிலைஏற்பட்டுள்ளது. மேலும் செய்யாற்றில் அதிக தண்ணீா் வந்தால் தரைப்பாலத்தில் உள்ள பள்ளத்தின் வழியாக தரைப்பாலம் மேல் தண்ணிா் வருகிறது. அந்த பள்ளத்தில் வாகனம் அல்லது பொதுமக்களின் கால்கள் சிக்கினால் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சாா்பில் செங்கத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா்வுநாள் கூட்டம், மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் யாரும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் தளவாநாய்க்கன்பேட்டை பகுதி மக்கள் சாா்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு பழுதடைந்துள்ள தரைப்பாலத்தை சரிசெய்ய கோரிக்கை கோரிக்கை மனுஅனுப்பப்பட்டுள்ளது, நடவடிக்கை எடுக்கும் மாவட்ட பொதுப்பணித்துறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com