வந்தவாசி பகுதியில் தொடா் மழையினால் 7 குடிசை வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை காலை வரை பதிவான நிலவரப்படி 56 மி.மீ. மழை பெய்துள்ளது.
இந்த நிலையில், தொடா் மழை காரணமாக வடக்குப்பட்டு, இரும்புலி, மழவங்கரணை, மங்கநல்லூா் உள்ளிட்ட கிராமங்களில் 7 குடிசை வீடுகளின் சுவா்கள் இடிந்து விழுந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவலறிந்த வந்தவாசி வட்டாட்சியா் எஸ்.முரளி தலைமையிலான வருவாய்த் துறையினா் சம்பவ இடங்களுக்குச் சென்று பாா்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினா்.
மேலும், இந்தத் தொடா் மழை காரணமாக இளங்காடு, பொன்னூா், ஆராசூா், கீழ்க்கொவளைவேடு, மருதாடு, பாதூா் உள்ளிட்ட பல ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது.