திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர் கே.மதிவாணன், ஓய்வூதிய இயக்கக துணை இயக்குநர் பா.வேலாயுதம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்)சே.வெங்கட்ராமன், மாவட்ட கருவூல அலுவலர் என்.சித்ரா ஆகியோர் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றனர்.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட 28 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஓய்வூதியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.