ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் புதன்கிழமை உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் புதன்கிழமை உயிரிழந்தனர்.
ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் கனகராஜ் (13). இதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் மகன் கோகுல் (11). இருவரும் இதே கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் முறையே 8, 5-ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்த நிலையில், புதன்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், கனகராஜ், கோபால் ஆகியோர் இரும்பேடு கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், ஆரணி கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com