108 ஆம்புலன்ஸில் பிரசவம்!

திருவண்ணாமலை அருகே பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை பிறந்தது.

திருவண்ணாமலை அருகே பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை பிறந்தது.
திருவண்ணாமலையை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (25). இவரது மனைவி மனிஷா (23). இந்தத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மனிஷாவுக்கு வியாழக்கிழமை காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர்.
எனினும், காஞ்சி கிராமம் அருகே சென்றபோது, ஆம்புலன்ஸிலேயே மனிஷாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தாயும் - சேயும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com