திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையத்தில் திருக்குறள் எழுதும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருக்குறள் தொண்டு மையப் பொருளாளர் ஜீவா தலைமை வகித்தார். மலர்ந்த திருக்குறள் சமுதாயம் அமைப்பின் நிர்வாகி கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் வரவேற்றார்.
திருவண்ணாமலை திருக்குறள் சமுதாய நெறிபரப்பு மையத்தின் நிறுவனர் சாமி.தமிழ்ச்செல்வி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருக்குறள் எழுதும் நிகழ்வின் 5-ஆவது சுற்றின் 20-ஆவது குறளான நீரின்றி அமையாது உலகு என்ற குறளை எழுதினார். நிகழ்ச்சியில், தொண்டு மைய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.