தூய்மை கிராமம் கணக்கெடுப்பு: ஊராட்சிச் செயலர்களுக்குப் பயிற்சி

செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை கிராமம் கணக்கெடுப்புப் பணி குறித்து கிராம ஊராட்சிச் செயலர்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை கிராமம் கணக்கெடுப்புப் பணி குறித்து கிராம ஊராட்சிச் செயலர்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
தூய்மை பாரத இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு, செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வி.மூர்த்தி தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.சத்யா, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் 
குமரன் ஆகியோர் தூய்மை கிராமம் திட்டத்தில் மக்களின் பங்களிப்புடன் திருவண்ணாமலை மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக கொண்டுவருவது குறித்து ஊராட்சிச் செயலர்கள், களப்பகுதி வழிநடத்துநர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில், செய்யா று ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சிச் செயலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com