வந்தவாசியை அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான நவீன இயற்பியல் ஆராய்ச்சி பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் வி.முத்து தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கு.அரிகுமார் முன்னிலை வகித்தார். கல்லூரி இயற்பியல் துறைத் தலைவர் எஸ்.இராஜேஷ்குமார் வரவேற்றார். சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வினிதா, அட்டூன்துத்தா, மணிகண்டன், செய்யாறு அரசுக் கல்லூரிப் பேராசிரியர் எஸ்.குமரேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கல்லூரி இயக்குநர்கள் எஸ்.அப்பாண்டைராஜன், மணி, சங்கரன் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.