ஆன்மிகச் சொற்பொழிவு

 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.


 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.
திருவண்ணாமலை திருமுறைக் கழகம் சார்பில் நடைபெற்ற சொற்பொழிவுக்கு, திருமுறைக் கழகத்தின் இணைச் செயலர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் வாசுதேவன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருமுறைக் கழகச் செயலர் மூர்த்தி வரவேற்றார். திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருமாளிகை தேவரின் நான்காம் பதிகம் என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார். இதில், திருமுறைக் கழக நிர்வாகிகள் சங்கரன், முருகன், அண்ணாமலை, தனபாக்கியம், மாரியம்மாள் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com