போளூரில் உள்ள வீரஆஞ்சநேயர் கோயிலில் ராகு கால பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போளூரில் தீயணைப்பு நிலையம் அருகே ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் ராகு கால சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு காலத்தில் வீரஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர், ஆஞ்சநேயர் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இதில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.