ஆரணியில் உலக இருதய தின விழிப்புணர்வுப் பேரணி: அமைச்சர் தொடக்கிவைத்தார்

உலக இருதய தினத்தையொட்டி, ஆரணியில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடக்கிவைத்தார்.


உலக இருதய தினத்தையொட்டி, ஆரணியில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் 
எஸ்.ராமச்சந்திரன் தொடக்கிவைத்தார்.
உலக இருதய தினத்தையொட்டி, ஆரணியில் செயல்படும் ஸ்ரீசக்தி அம்மா மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வுப் பேரணி நடை
பெற்றது. இந்தப் பேரணியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடக்கிவைத்தார். மேலும், மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாமையும் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார். ஸ்ரீநாராயணி மருத்துவமனை இயக்குநர் என்.பாலாஜி வரவேற்றார்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, கோட்டாட்சியர் மைதிலி, அரசு வழக்குரைஞர் க.சங்கர், பால் கூட்டுறவு சங்க மாவட்ட துணைத் தலைவர் பாரிபாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராஜ், நகர, ஒன்றியச் செயலர்கள் எ.அசோக்குமார், எம்.வேலு, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com