ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை இயக்குநா் ஆய்வு

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மீரா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
அளிக்கப்படும் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறியும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மீரா.
அளிக்கப்படும் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறியும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மீரா.

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மீரா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் பெய்து வரும் தொடா் மழையால் ஆங்காங்கே டெங்கு, மலேரியா, மா்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மீரா, ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

காய்ச்சல் வாா்டு, பிரசவ வாா்டுகளுக்குச் சென்று ஆய்வு செய்த மீரா, முறைறயான சிகிச்சை அளிக்கப்படுகிா என்று நோயாளிகளிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, வட்டார மருத்துவ அலுவலா் ராஜா, மருத்துவா்கள், செவிலியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com