திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நீர் மேலாண்மைத் திட்டப் பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) இரா.ஆனந்தன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட டி.வாளாவெட்டி, வெறையூர், காடகமான், விருதுவிளங்கினான் ஆகிய ஊராட்சிகளில் நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ஏரி, குளங்கள் தூர்வாரும் பணிகளை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தி.அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) இரா.ஆனந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டப் பணிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, பணி மேற்பார்வையாளர்
கா.ஆறுமுகம் உடனிருந்தார்.