மஹாளய அமாவாசையையொட்டி, வந்தவாசியில் சனிக்கிழமை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.
வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயில் வளாகங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற வந்தவாசி நகரைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பித்ரு வழிபாடு செய்தனர்.