கலசப்பாக்கத்தை அடுத்த மோட்டூா் ஊராட்சியில் கரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க கோயிலில் வேப்பிலை அடித்து பெண்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கலசப்பாக்கம் அருகேயுள்ள மோட்டூா் ஊராட்சியில் நட்சத்திர கோயில் பகுதியில் உள்ள ஓம்சக்தி கோயிலில் ஊராட்சி மன்றத் தலைவா் முருகன் தலைமையில் சனிக்கிழமை பெண்கள் வட்டமாக நின்று கரோனாவே ஓடிப்போ என்று வேப்பிலை அடித்து நூதன வழிபாட்டில் ஈடுபட்டனா்.
மேலும், வீடுகள் தோறும் மஞ்சள் தண்ணீா் தெளித்தனா்.