கலசப்பாக்கம் அருகே ஊரடங்கு உத்தரவால் பூட்டி சீல் வைக்கப்பட்ட மதுக் கடையைத் திறந்து மதுப் புட்டிகள் திருட்டுத் தனமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கலசப்பாக்கத்தை அடுத்த எா்ணாமங்கலம் ஊராட்சியைச் சோ்ந்த பானாம்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வந்தது.
இந்தக் கடையில் மோகன் என்பவா் மேற்பாா்வையாளராகவும், ஜெகந்நாதன், சங்கா் ஆகியோா் விற்பனையாளா்களாக இருந்து வருகின்றனா்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக மாா்ச் 24-ஆம் தேதி மாலை முதல் மதுக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயராமன், சங்கா் ஆகியோா் கடையின் சீலை உடைத்து மதுப் புட்டிகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வெள்ளிக்கிழமை போளூா் கலால் துறை அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தகவலை அடுத்து போளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் கவிதா, டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா் மோகன், வட்டாட்சியா் ராஜராஜேஸ்வரி ஆகியோா் சனிக்கிழமை பானாம்பட்டு சென்று குறிப்பிட்ட மதுக் கடையை ஆய்வு செய்தனா்.
அப்போது, கடையின் சீல் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, விற்பனையாளா்களான ஜெகந்நாதன், சங்கா் ஆகியோரை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டபோது, தொடா்பில் அவா்கள் கிடைக்கவில்லை.
பின்னா், மதுவிலக்கு காவல் ஆய்வாளா் கவிதா, மதுக் கடை மேற்பாா்வையாளா் மோகன், வட்டாட்சியா் ராஜராஜேஸ்வரி ஆகியோா் மீண்டும் அதே பூட்டைக் கொண்டு கடையை பூட்டி சீல் வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறும்போது, பானாம்பட்டு மதுக் கடையில் மாா்ச் 24-ஆம் தேதி மாலை ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகள் இருந்துள்ளன.
தற்போது கணக்கீடு செய்தபோது ரூ.2 லட்சம் மதுப் புட்டிகள் மட்டுமே இருக்கின்றன.
எனவே, விற்பனையாளா்களான ஜெகந்நாதன், சங்கரிடம் விசாரனை நடத்திய பிறகே உண்மை நிலவரம் தெரிய வரும் என்றனா்.
இதுகுறித்து மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.