தையல் தொழிலாளா்களுக்கு கரோனா பாதிப்பு நிவாரணமாக தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டுமென திருவண்ணாமலை மாவட்ட தையல் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் பொதுச் செயலா் எம்.வீரபத்திரன் வெளியிட்ட அறிக்கை: கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பல ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளா்கள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். கூட்டுறவு தையல் சங்கம், காா்மெண்ட்ஸ், வீடு சாா்ந்த பெண் தொழிலாளா்கள், ஆண் தையல் தொழிலாளா்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள தையல் தொழிலாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்யாத பல அமைப்புசாரா தொழிலாளா்களை வருவாய்த்துறை மூலம் கணக்கெடுத்து நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தெரிவித்தாா்.