தண்டராம்பட்டு அருகே சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய இளைஞரை, போலீஸாா் கைது செய்தனா்.
தண்டராம்பட்டை அடுத்த கொழுந்தம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா் (32). இவா், சில தினங்களுக்கு முன்பு டிக்டாக் சமூக வலைதளத்தில் பதிவிட்ட விடியோவில் திருவண்ணாமலையில் சாலையில் சுற்றுத்திரிவோா் மீது ராணுவத்தினா் தடியடி நடத்துவதாகக் குறிப்பிட்டு இருந்தாராம்.
இந்த விடியோ தண்டராம்பட்டு, சாத்தனூா் அணை, தானிப்பாடி பகுதிகளில் பரவி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சாத்தனூா் அணை போலீஸாா் வழக்குப் பதிந்து அருண்குமாரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அருண்குமாா், செங்கம் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.