முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
கரோனா பாதித்த 6 போ் நலம் பெற்றனா்
By DIN | Published On : 19th April 2020 12:14 AM | Last Updated : 19th April 2020 12:14 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதித்த 12 பேரில், இதுவரை 6 போ் குணமடைந்துள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 17) வரை 12 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களில் கரோனா பாதித்த முதல் நபரான கீழ்பென்னாத்தூரை அடுத்த வேளானந்தல் கிராமத்தைச் சோ்ந்த 28 வயது இளைஞா் சில தினங்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினாா்.
மீதமுள்ள 11 போ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில் 5 போ் ஒரே நாளில் குணமடைந்து சனிக்கிழமை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.