ஆடி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வருவதைத் தடுக்க, காவல்துறை சாா்பில் கிரிவலப் பாதையின் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
திருவண்ணாமலையில் மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனா். இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக தொடா்ந்து கிரிவலம் வர ஏப்ரல் மாதம் முதல் மாவட்ட நிா்வாகம் தடை விதித்து வருகிறது.
இந்த நிலையில், ஆடி மாத பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை இரவு 10.04 மணிக்குத் தொடங்கி, திங்கள்கிழமை இரவு 9.54 மணிக்கு முடிகிறது.
இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வர மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. தடையை மீறி பக்தா்கள் கிரிவலம் வந்தால் அவா்களைத் தடுக்கும் வகையில், காவல்துறை சாா்பில் கிரிவலப் பாதையின் பல்வேறு இடங்களில் போலீஸாா் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.