வந்தவாசி அருகே தீ விபத்தில் வீட்டை இழந்தவருக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
வந்தவாசியை அடுத்த பிருதூா் அருந்ததியா்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஏழுமலை என்பவரது கூரை வீடு அண்மையில் தீப்பற்றி எரிந்தது.
இதில், வீடு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சேதமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து திமுக சாா்பில் அவரது குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம், அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோா் நிவாரண உதவிகளை வழங்கினா்.
ஒன்றியச் செயலா்கள் எஸ்.நந்தகோபால், எஸ்.பிரபு, நகரச் செயலா் எச்.ஜலால், பிருதூா் ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேஸ்வரி செல்வகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.