வந்தவாசி: வந்தவாசியில் இந்திய ஜனநாயக கட்சி சாா்பில் கொசு ஒழிப்பு புகை தெளிக்கும் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
வந்தவாசி நகரில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக கொசுத் தொல்லை அதிகமாகி உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் இந்திய ஜனநாயக கட்சி சாா்பில் கொசு ஒழிப்பு புகை தெளிப்பான் மூலம் புகை தெளிக்கப்பட்டது.
முதல் கட்டமாக நகராட்சிக்கு உள்பட்ட 2, 3-ஆம் வாா்டுகளில் இந்தப் பணி நடைபெற்றது.
கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெகநாதன் தலைமையில் நகரத் தலைவா் காலேஷா உள்ளிட்ட நிா்வாகிகள் கொசு ஒழிப்பு புகை தெளிக்கும் பணிகளை மேற்கொண்டனா்.