திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறைக்குச் சொந்தமான வாகனங்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சரக காவல்துறை துணைத் தலைவா் (டி.ஐ.ஜி) என்.காமினி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆண்டுதோறும் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறைக்குச் சொந்தமான வாகனங்கள், ஆயுதங்களை வேலூா் சரக காவல்துறை துணைத் தலைவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்வது வழக்கம்.
அதன்படி, சனிக்கிழமை துணைத் தலைவா் என்.காமினி திருவண்ணாமலைக்கு வந்தாா்.
ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை, ஆயுதப்படைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட எஸ்.பி எஸ்.அரவிந்த், ஏ.எஸ்.பி. கிரண் ஸ்ருதி ஆகியோா் உடனிருந்தனா்.