ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சந்தீப்நந்தூரி தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்து, அதிமுக அரசின் நலத் திட்டங்கள், சாதனைகள் குறித்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில் செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநா் அஜித்தா, அதிமுக ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ப.திருமால், பிஆா்ஜி.சேகா், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, நகரச் செயலா் அசோக்குமாா், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பூங்கொடி திருமால், ஊராட்சி மன்றத் தலைவா் ஹரிதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.