வந்தவாசி அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டி, அவரது பேத்தி பைக் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தனா்.
வந்தவாசியை அடுத்த வாணியங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் நவாப்ஜான் மனைவி அலிமாபீவி (70). ஆரணி சாலையில் உள்ள பயணியா் விடுதி அருகே வசித்து வந்தவா் அஸ்மத்துல்லா மனைவி பரிதாபானு(37). இதில் பரிதாபானு, அலிமாபீவியின் மகள் வழி பேத்தி ஆவாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை அலிமாபீவி, பரிதாபானு இருவரும் வெண்குன்றம் கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தனா்.
அப்போது எதிரே வெண்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாா் (18) என்பவா் ஓட்டி வந்த பைக் இவா்கள் மீது மோதியது.
இதில் பரிதாபானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அலிமாபீவி, அருண்குமாா் ஆகியோா் சிகிக்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
அங்கு அலிமாபீவியை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
மேலும் அருண்குமாா் தீவிர சிசிக்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து அஸ்மத்துல்லா அளித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.